சேலம் அருகே காதலன் மாயமானதால் காதலி செய்த காரியம்..! - Seithipunal
Seithipunal


சேலம் அருகே காதல் வசப்பட்ட பட்டதாரி பெண் ஒருத்தர் காதலன் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். காதலனும் கைவிட்டுவிட்டான், பெற்றோர்களும் கைவிட்ட நிலையில் இப்பொது அந்த பெண் நிர்கதியாக தவிக்கிறாள்.

கொண்டலாம்பட்டி அருகில் உள்ள எஸ் .நாட்டமங்கலத்தைச் சேர்த்த கவுசல்யா. பி ஏ பட்டதாரியான இவரும், அதே பகுதியச்சேர்ந்த தறி தொழிலாளி பூபதியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் பூபதி வீட்டுக்கு வந்த கவுசல்யா, அங்கு பூட்டிக்கிடந்த வீட்டின் முன்பு திடீர் என்று அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

தன்னை காதலித்து நெருங்கி பழகிய பூபதி, திருமணம் செய்ய மறுத்து விட்டதுடன், காணாமல் மாயமாகி விட்டதாகவும், தன்னை பெற்றோரும் ஏற்க மறுத்த நிலையில் நிர்க்கதியாக தவிப்பதாகாவும் கண்ணீருடன் கூறினார்.

இதற்கிடையே காதல் விவகாரத்தால் ஏற்கனவே கவுசல்யா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், காதலனுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lover missing in salem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->