17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.! காதலன் உட்பட 3 பேர் கைது.!
Lover including 3 arrested for gang raping 17 year old girl in Villupuram
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வீரணாமூர் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பெருமாள். இவரது மகன் ஆட்டோ ஓட்டுநர் சிம்பு(19). இவருக்கும் திண்டிவனத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிம்பு பலமுறை சிறுமியை வாலியர் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தன்னுடன் ஆட்டோ ஓட்டும் பட்டணம் பகுதியை சேர்ந்த சிவா மற்றும் செல்வம் ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று காலை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிம்பு, சிவா செல்வம் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
English Summary
Lover including 3 arrested for gang raping 17 year old girl in Villupuram