காதலியோடு திருமணம் செய்த மறுநாளே தூக்கில் தொங்கிய காதல் கணவன்.! அந்த ஒரு வார்த்தை.,  - Seithipunal
Seithipunal


காதலித்த பெண்ணை திருமணம் செய்த மறுநாளே, காதல் கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்m சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள வள்ளுவர்காலனி கிராமத்தை சேர்ந்தவர் மோகன் பாபு. இவருக்கு வயது 21 ஆகிறது. இவர் அதே பகுதியில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக இருந்து வருகிறார். மோகனுக்கும் கோத்தகிரி அருகே உள்ள குமரன் காலனி பகுதியை சேர்ந்த கௌசல்யா என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியுள்ளது.

இவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே, பெண் வீட்டார் கௌசல்யாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.

இதனையடுத்து மோகன் கௌசல்யாவை அழைத்துக்கொண்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடித்த கையேடு கோத்தகிரியில் உள்ள மோகன்பாபுவின் வீட்டிற்கு வந்தனர்.

மகன் திருமண கோலத்தில் வந்து நிற்பதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தங்களுக்கு தெரியாமல் திருமணம் செய்ததால் பெற்றோர் காதல் ஜோடியிடம் பேசாமல் இருந்துள்ளனர். மேலும், மோகன் பாபுவை தனிக்குடித்தனம் செல்லுமாறு பெற்றோர்கள் தெரிவித்த காரணத்தினால் மோகன் பாபு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.

இந்த நிலையில், மறுநாள் காலை மோகன் பாபு தனது மனைவியை அழைத்துக்கொண்டு மேட்டுப் பாளையத்தில் பேருந்து நிலையத்திற்கு வந்தார். மனைவி கௌசல்யாவை பேருந்து நிலையத்தில் அமர வைத்துவிட்டு, 'நான் கோத்தகிரிக்கு சென்று நமது ஆடை, உடைமைகளை எடுத்து விட்டு வருகிறேன். அதுவரை எனக்காக காத்திரு' என்று அவரிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

மாலை வரை மோகன்பாபு வராததால் பதற்றமடைந்த கௌசல்யா உடனடியாக அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் 'நான் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் கௌசல்யா தொடர்பு கொண்டபோது மோகன்பாபுவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கௌசல்யா, மோகன்பாபுவின் உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனே அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது மோகன்பாபுவின் உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. அப்போது ஜன்னலை உடைத்து பார்த்தபோது மோகன்பாபு ஒரு அறையில் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மோகன்பாபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.

திருமணம் முடிந்த மறுநாளே காதல் கணவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காதலிப்பது அவரவர் உரிமை என்றாலும், பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்தால், உங்கள் வாழ்க்கை இன்பமயமாக அமையும். இல்லையென்றால் இது போன்ற துயர சம்பவங்களில் தான் முடிவடையும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LOVE MARRIAGE HUSBAND SUICIDE IN GODHAKIRI


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->