காதலை ஏற்க மறுத்ததால் இளைஞர் தற்கொலை., மரணத்திலும் தனது காதலிக்கு கொடுத்த பரிசு!!
love failure young boy sucide
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த குமரேசபாண்டியன். அந்த பகுதியில் கார்பெண்டராக வேலை பார்த்து வந்துள்ளார், தனது உறவுக்கார பெண் ஒருவரை கடந்த 2 ஆண்டாக காதலித்து வந்த குமரேசபாண்டியன் தனது காதலை அப்பெண்ணிடம் தெரிவித்தார். ஆனால் அவரது காதலை ஏற்க அந்த பெண் மறுத்து விட்டார். பின்னர் குமரேச பாண்டினுடன் இருந்த நட்பையையும் துண்டித்தார்.
மேலும், சமூக வலைதளங்களிலும் இருந்த பழக்கத்தையும் நிறுத்தி கொண்டார். இதனால் குமரேசபாண்டியன் மேலும் வேதனை அடைந்தார். இதையடுத்து, நேற்று மாலை குமரேசபாண்டியன், பொழிச்சலூரில் உள்ள நண்பர் முத்துவை பார்க்க சென்றார். அப்போது அங்கிருந்த காலி மைதானத்தில் இருவரும் மது அருந்தினர்.
காதல் தோல்வியால் மிகுந்த மனவேதனையில் இருந்த குமரேசபாண்டியன் திடீரென்று மதுபாட்டிலை உடைத்து தனது கையை தாறுமாறாக அறுத்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து, ரத்தத்தை நிறுத்த முயற்சித்தார். ஆனால் அதிகளவு ரத்தம் வெளியேறி கொண்டு இருந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அப்போது குமரேசபாண்டியன், தனது கையில் இருந்து வெளியேறிய ரத்தத்தை காலி மதுபாட்டிலில் பிடித்து நிரப்பினார். அந்த பாட்டிலை தனது நண்பர் முத்துவிடம் கொடுத்து காதலை ஏற்க மறுத்த தனது காதலிடம் இந்த ரத்தத்தை பரிசாக கொடுத்து விடும் படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் குமரேசபாண்டியனை குரோம்பேட்டை அரசு மருத்துவமணையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பெற்று கொள்ள மறுத்து விட்ட குமரேச பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
English Summary
love failure young boy sucide