மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து.! ஒருவர் பலி .! - Seithipunal
Seithipunal


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை முகப்பேரை சேர்ந்தவர் கருப்புசாமி(28). இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கருப்பசாமி இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவருடன் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் போலிவாக்கம் அருகே எதிரே வந்த லாரி மோதி, பின்னால் வந்த தனியார் பேருந்தின் முன்பக்க டயரில் சிக்கி கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து பலத்த காயமடைந்த மோகனசுந்தரத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மணவாளநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry motorcycle accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->