கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்து - ஓட்டுநர் பலி - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பு கட்டையில் மோதிய விபத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள விளங்கம்பாடி ஐயனாரப்பன் கோவில் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரியை ஓட்டிச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை பகுதியை சேர்ந்த குமரேசன்(26) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த மயிலம் போலீசார் உயிரிழந்த குமரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry crash in tha road side barricade in Villupuram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->