திருச்செந்தூரை சேர்ந்த வியாபாரி, லாரி மோதி ஊத்துக்கோட்டையில் பலி!! - Seithipunal
Seithipunal


ஊத்துக்கோட்டையில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தவர் ஜெகதீசன்(35). இவரது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே உள்ள சாத்தான் குளத்தை அடுத்த சோலையார்புரம் கிராமம்.

இவரை தனது வேலையை முடித்து விட்டு சாப்பிடுவதற்காக அருகில் உள்ள உணவகத்திற்கு, தனது மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு சென்றார்.

அப்போது அண்ணாசிலை அருகே சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சமையல் கியாஸ் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி திடீரென அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

அந்த விபத்தில், ஜெகதீசன் தலை நசுங்கி சம்பவம் இடத்திலேயே இறந்து விட்டார். பின்பு சம்பவம் இடத்தில் இருந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

இதுகுறித்து சம்பவம் இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். மேலும் தப்பி ஓடிய டேங்கர் லாரி ஓட்டுனரை தேடி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lorry accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->