கறவை மாடுகள் வாங்க 10 லட்சம் ரூபாய் வரை கடன்.! மக்களே பயன்படுத்தி கொள்ளுங்கள்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்ட கூட்டு துறை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கறவை மாடுகள் வாங்குவதற்காக 10 லட்சம் ரூபாய் வரை கூட்டுறவு கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்.

இதற்காக கறவை இனங்கள் திட்டத்தின் அடிப்படையில் 10 லட்சம் ரூபாய் வரை கடன்கள் வழங்கப்பட உள்ளது.

தனிநபர் ஒருவர், தன்னுடைய சொந்த ஜாமீனில் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற விரும்பும் விவசாயிகள், தங்களுடைய நில அடமானத்தில் பெயரில் கடன் வழங்கப்படும்.

விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகலாம் என்று, திருப்பூர் மாவட்ட கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Loan up to 10 lakh rupees to buy dairy cows


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->