மது பாட்டில்கள் விற்பனை செய்த 4 பேர் கைது - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் நச்சலூர் பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக குளித்தலை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது நங்கம் வாய்க்கால் கரை பகுதி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த தமிழ்ச்செல்வன்(39) மற்றும் கோபிநாத்தை (29) போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதேபோல் திருச்சாப்பூர் பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்த ராமச்சந்திரன்(40) மற்றும் பாறைப்பட்டு பேருந்து நிலையம் பகுதியில் வைரமணி(43) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து அவர்களிடமிருந்து மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Liquor sellers arrested in karur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->