கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை.. அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை.. 5 பேர் பணியிடை நீக்கம்.!
liquor sale high price 5 officers suspended
மதுரையில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த மேலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முதுநிலை மண்டல மேலாளர் அருண்சத்யா, மதுரை தெற்கு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காளவாசல் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையின் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக மதுபானகள் விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும், கடைக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் பணிக்கு அமர்ந்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, கடையின் மேற்பார்வையாளர் ராஜா, விற்பனையாளர்கள் வேல்பாண்டி, இளமாறன் ஆகியோர் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.. இதே போல, எல்லீஸ் நகரில் செயல்படும் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர், விற்பனையாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், திருமங்கலம் மதுபான கடையில் விற்பனை தொடங்காத நிலையில் கையிருப்பில் இருந்த ரூ. 59,800 குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக முதுநிலை மண்டல மேலாளர் அருண்சத்யா தெரிவித்துள்ளார்.
English Summary
liquor sale high price 5 officers suspended