ஆசிரியரின் காலில் விழுந்து வாழ்த்து பெற்ற சட்டமன்ற உறுப்பினர்..!
legislator congratulated fell teacher feet
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மகேஷ்வரிபெரியசாமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்துகொண்டு, ஆசிரியர்களை பாராட்டி, சால்வை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கினார்.
மேலும், தனது பள்ளி பருவ காலத்தில் கல்வி கற்றுக்கொடுத்த பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய செல்வதாசுக்கு, சால்வை அணிவித்தும், நினைவு பரிசுகளை வழங்கியும், தன்னுடைய பள்ளிப் பருவ காலத்தில் தன்னை நல்வழிப்படுத்திய தனது ஆசிரியரின் காலில் விழுந்து, தான் இந்த நிலைக்கு வருவதற்கு உறுதுணையாக இருந்ததை நினைவுப்படுத்தும் வகையில், வாழ்த்து பெற்றார்.
இவ்விழாவில் , கம்பன் கழக துணைத் தலைவர் பரமசிவம் மற்றும் ஆசிரியர் பெருமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி, ஆணையாளர் ஷகிலா, நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
legislator congratulated fell teacher feet