காஞ்சிபுரம் || இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து.. பெண் காவலர் மகனுடன் பலி..!
Lady Police Dead In Accident
கார் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தையுடன் பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் உமாதேவி (26). இவர் தனது கணவர் ராஜா மற்றும் மகன் தக்ஷூத்-வுடன் இரு சக்கரவாகனத்தில் சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தார்.
சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது அவர்கள் பின் வந்த லாரி அங்கிருந்த கார்கள் மீது மோதியதால் அவை இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் உமாதேவி மற்றும் அவரது மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த ராஜாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்ட்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Lady Police Dead In Accident