லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.! கூலி தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியை சேர்ந்த மரிய அல்போன்ஸ் என்பவரின் மகன் கூலி தொழிலாளி அந்தோணி கவின்(29). இவர் நேற்று இரவு தாம்பரம் நோக்கி மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது வானகரம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அந்தோணி காவின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த அந்தோணி கவினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Laborer killed in Twowheeler collides with truck


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->