15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் சூளேஸ்வரன் பட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளி சபரி(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.

இதையடுத்து இவர்கள் காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதற்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், திடீரென சிறுமி மாயமானார். இதைத்தொடர்ந்து பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.

ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் சிறுமி சபரி வீட்டில் இருப்பதும், ஆசை வார்த்தைகள் கூறி சிறுமையை சபரி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சபரியை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Laborer arrested for raping 15 year old girl in kovai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->