தென்காசியில் காலையிலேயே பெரும் அதிர்ச்சி சம்பவம் | துப்பாக்கியால் சுட்டுகொண்டு எஸ்.எஸ்.ஐ தற்கொலை!
kutralam ssi suicide
பழைய குற்றாலத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன் இன்று காலை துப்பாக்கியால் சுட்டுகொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் ரிசார்ட் ஒன்றில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ) பார்த்திபன் தங்கி உள்ளார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென பார்த்திபன் துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு ரிசார்ட் பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, விரைந்துவந்த போலீசார் பார்த்திபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். பார்த்திபனின் தற்கொலைக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரனின் காவல் பணிக்காக பார்த்திபன் வந்திருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.