அமித்ஷாவுக்காக மனமிறங்கிய குஷ்பூ.! ட்வீட்டர் பதிவால் கிளம்பிய பூதம்.!
kushpoo tweet about amit shah
நாடு முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்த சூழலில் மக்கள் களப்பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போலீசார் மற்றும் டாக்டர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போன்றோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கின்றார்.
கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருக்கின்றார். இதுகுறித்து அவர் டாக்டர்களின் அறிவுரையின் படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சமீபகாலமாக தம்மை சந்தித்த நபர்கள் அனைவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அந்த பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, கொரோனாவிலிருந்து அமித்ஷா விரைந்து குணமடைய விரும்புவதாகவும், இறைவனை பிரார்த்திப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, குஷ்பூ பாஜகவில் இணைவதாக வதந்தி கிளம்பிய நிலையில், இது மேலும், பரபரப்பை கிளப்பியுள்ளது.
English Summary
kushpoo tweet about amit shah