திருமாவளவனின் சர்ச்சை பேச்சு எதற்காக?.. நடிகை குஷ்பூ விமர்சனம்.!
Kushboo Speech about Thirumavalavan Hate Speech about Hindu Peoples
ஊடகத்தின் பார்வையை திருப்புவதற்காக, திருமாவளவன் தொடர்ச்சியாக இந்து மதம் குறித்து அவதூறு பேசி வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த குஷ்பூ, இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " பாரதிய ஜனதா கட்சியின் தலைமை உத்தரவிட்டால் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட நான் தயாராக உள்ளேன்.
திருமாவளவன் தொடர்ந்து இந்து மதத்தை பற்றியும், இந்து மத தெய்வங்களை பற்றியும் அவதூறாக பேசியதற்கு முழுமுதற்காரணம் ஊடகத்தின் பார்வை அவர் மீது திரும்ப வேண்டும் என்று தான். சர்ச்சையாக பேசுவதை தனது முழுமுதற் கொள்கையாகவே வைத்திருக்கிறார். அதனை கைவிட்டு பொது மக்களுக்கு நல்லது செய்தால் அவருக்கு நல்லது. மக்களுக்கு நல்லது செய்வதை கொள்கையாக அவர் மாற்ற வேண்டும் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kushboo Speech about Thirumavalavan Hate Speech about Hindu Peoples