தஞ்சாவூர் : கும்பகோணம் புதுமண தம்பதி அரிவாளால் வெட்டி படுகொலை.!
Kumbakonam new couple hacked to death with a scythe
கும்பகோணம் அருகே சோழபுரத்தில், புதுமணத் தம்பதி அரிவாளால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரத்தில், புதிதாக திருமணம் செய்து கொண்ட மோகன்-சரண்யா தம்பதியினர் சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில், அவர்கள் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த இரட்டைக் கொலை சம்பவத்தில், புதுமணத் தம்பதிகளை வெட்டிக் கொன்ற சரண்யாவின் உடன்பிறந்த சகோதரர் சக்திவேல் மற்றும் அவரது நண்பர் ரஞ்சித்தை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுமணத் தம்பதி காதல் திருமணம் செய்து கொண்டனரா.? அல்லது இது ஆணவக் கொலையா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
English Summary
Kumbakonam new couple hacked to death with a scythe