குலசை தசரா திருவிழா.. சினிமா நடிகர் நடிகைகள் பங்கேற்க அனுமதி.. ஆனால் இதற்கெல்லாம் அனுமதி இல்லை.!
Kulasai dussera festival actor and actress allowed
குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா நிகழ்ச்சிகளில் சினிமா நடிகர் மற்றும் நடிகைகள் பங்கேற்க அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தசரா திருவிழா கர்நாடகாவிற்கு அடுத்தப்படியாக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் சினிமா நடிகைகள் மற்றும் நடன அழகிகள் ஆபாசமாக நடனமாடுவதற்கும், ஆபாசமான பாடல்களை ஒலிப்பதற்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த தசரா குழுவின் செயலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க சினிமா நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்துள்ளார்
இந்த நிலையில் குலசை தசரா திருவிழா கலை நிகழ்ச்சிகளில் சினிமா நடிகர் மற்றும் நடிகைகள் பங்கேற்க அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Kulasai dussera festival actor and actress allowed