கே எஸ் அழகிரியின் ஏளனப்பேச்சு!! தமிழகத்தில் இது தான் நிலை!!
ks alagiri says about bjp tamilisai
ஒரு மலர் மலர்வதை யாரும் தடுக்க முடியாது. ஆனால், அதற்கு தண்ணீர் வேண்டும். நீரற்ற குட்டையில் எவ்வாறு தாமரை மலரும்?. என தமிழ்நாடு நீரின்றி தவிப்பதை சுட்டிக்காட்டி ஏளனம் செய்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று டெல்லிக்கு செல்கையில் செய்தியாளர்களிடம், "எங்கள் கூட்டணிக்கு தமிழகத்தில் மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்திருப்பது மகிழ்சியை ஏற்படுத்துகிறது.
இது கொள்கை ரீதியான கூட்டணி. அதனால், மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். அனைவருக்கும் எங்களது நன்றி. தென்னிந்தியாவில் வெற்றி பெற்றிருக்கிறோம். இனி வரும் காலங்களில் வட இந்தியா மேற்கு இந்தியாவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம். வெற்றியும் தோல்வியும் ஒரு வீரனுக்கு சகஜம்.
எங்களுக்கு இது சறுக்கல் தானே தவிர, வீழ்ச்சி அல்ல. மோடி தனி நபர் விமர்சத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். ஒரு மலர் மலர்வதை யாரும் தடுக்க முடியாது. ஆனால், அதற்கு தண்ணீர் வேண்டும். நீரற்ற குட்டையில் எவ்வாறு தாமரை மலரும்?.
இந்தியாவிற்கு ராகுல் தான் தான் சரியான வழிகாட்டி. காங்கிரசில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்று கொள்வோம். " என அவர் கூறியுள்ளார்.
English Summary
ks alagiri says about bjp tamilisai