டிக் டாக் வீடியோவிற்காக மீனை விழுங்கிய 22 வயது இளைஞன்.. துடிதுடிக்க அரங்கேறிய சோகம்.!!
Krishnagiri youngster died police investigation tic tok video
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் காலேகுண்டா பார்வதி நகர் பகுதியை சார்ந்தவர் சக்திவேல். இவரது மகன் வெற்றிவேல் (வயது 22). இவர் கட்டிட மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் நிலையில், இவருக்கு திருமணம் முடிந்து, இரண்டு வயதுடைய சரண் என்ற மகன் இருக்கிறார்.
இந்நிலையில், நேற்று வெற்றிவேல் தனது நண்பர்களுடன் ஓசூர் தேர்ப்பேட்டை ஏரிக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு வைத்து நண்பர்களுடன் மது அருந்திய நிலையில், மீன் பிடிப்பதை டிக் டாக் விடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
இந்த சமயத்தில் மது போதையில், உயிருடன் மீனை விழுங்கியுள்ளார். இதனை விடியோவாகவும் பதிவு செய்து கொண்டு இருந்த நிலையில், மீன் எதிர்பாராத விதமாக சுவாசக்குழாயில் சிக்கியுள்ளது.
இதனால் கடுமையான அளவில் மூச்சுத்திணறி துடித்த நண்பரை மீட்டு, ஓசூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் வெற்றிவேலை பரிசோதனை செய்ததில் அவர் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. இதன்பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மீன் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், மது போதையில் மீனை வெற்றி வேல் விழுங்கினாரா? அல்லது டிக் டாக் லைக்கிற்காக நண்பர்களுடன் பந்தயம் கெட்டி இதுபோல செய்தாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Krishnagiri youngster died police investigation tic tok video