கலப்பு திருமணம் செய்ததாக போலிச்சான்றிதழ் கொடுத்து அரசுப்பணி.. ஆசிரியை மீது வழக்குப்பதிவு.!
Krishnagiri Uthangarai Fake Inter Caste Marriage Certificate Govt Job Teacher Investigation
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியை சார்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி சுதா (வயது 35). இவர் கடந்த 2010 ஆம் வருடத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்டதாக சான்றிதழ் பெற்றுள்ளார்.
மேலும், இதனை வைத்து கடந்த 2014 ஆம் வருடத்தில் கணினி ஆசிரியராகவும் பணி நியமன ஆணையை பெற்றுள்ளார். இவரது கல்வி சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ் தொடர்பாக கல்வி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதன்போது சுதா போலியான கலப்புத்திருமண சான்றிதழ் கொடுத்தது உறுதியாகவே, ஆசிரியை சுதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவரின் மீது கல்வி அலுவலர்கள் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Krishnagiri Uthangarai Fake Inter Caste Marriage Certificate Govt Job Teacher Investigation