கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, நாமக்கல்லில் நல்ல மழை.. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கமானது கொடூரமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் கடுமையான அளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

மேலும், இன்று திடீரென வெப்பச்சலனம் காரணமாக கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனைப்போல நாமக்கல், பரமத்தி வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. 

கோயம்புத்தூர், தடாகம், மேட்டுப்பாளையம், நீலகிரி, கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இந்நிலையில், கோடைமழை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி பகுதியை சார்ந்த முதியவர் வீட்டில் இருந்த நிலையில், திடீர் மழை காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலியாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Rain Old Man Death 5 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->