ஓவர் ஸ்பீடுடன் ஓவர் டேக்.. முகம் சிதைந்து துண்டாகி விழுந்து உயிரிழந்த இளைஞர்.. கிருஷ்ணகிரியில் சோகம்.!
Krishnagiri Pochampalli Near Village Road Accident Youngster Santhosh Kumar Died 5 July 2021
போச்சம்பள்ளி அருகே சாலை விபத்தில் சிக்கிய இளைஞரின் முகம் பிய்த்து எறியப்பட்டதால், வாகன ஓட்டிகள் பெரும் சோகமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியை சார்ந்த இளைஞர் சந்தோஷ் குமார். இவர் இன்று காலை அங்குள்ள மத்தூர் பகுதியில் இருந்து போச்சம்பள்ளி நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளார்.
இவரின் வாகனம் அங்குள்ள திருப்பத்தூர் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அங்கம்பட்டி கூட்டுரோடு பகுதியில் சென்றுள்ளது. இதன்போது, அவ்வழியாக சரக்கு வாகனம் ஒன்று அரசு பேருந்தை முந்தி செல்ல வலதுபுறம் சாலையில் வளைத்து முந்தி சென்றுள்ளது.
இந்நிலையில், சரக்கு வாகனம் முந்தி செல்ல முற்பட்ட போது, அங்கு எதிர்திசையில் வந்த சந்தோஷ் குமாரின் இரு சக்கர வாகனத்தில் மோதியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொடூர விபத்தில், சந்தோஷ் குமார் சம்பவ இடத்திலேயே பலியாகினார்.
மேலும், அவரது முகம் சரக்கு வாகனத்தின் பக்கவாட்டில் மோதி பிய்த்து எறியப்பட்டு, முகம் துண்டாக ஓடி துடிதுடிக்க பலியானார். விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன ஓட்டுநர் தப்பியோட முயற்சிக்கவே, விபத்தை நேரில் பார்த்து பதறிப்போன பொதுமக்கள் லாரி ஓட்டுனரை சிறைபிடித்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சந்தோஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், லாரி ஓட்டுனரையும் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த விஷயம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Krishnagiri Pochampalli Near Village Road Accident Youngster Santhosh Kumar Died 5 July 2021