அதிவேக பயணம்.. 9 மாத குழந்தை உட்பட 5 பேர் உடல் நசுங்கி பலி.. நின்ற லாரி மீது மோதிய ஆம்னி.! - Seithipunal
Seithipunal


சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கேஸ் டேங்கர் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சார்ந்த குடும்பத்தினர், நேற்று ஆம்னி வேனில் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். பின்னர், அவர்கள் அனைவரும் பெங்களூருக்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளனர். 

காரில் மொத்தமாக 8 பேர் பயணம் செய்த நிலையில், கார் கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுண்டம்பட்டி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கியாஸ் டேங்கர் லாரி மீது வாகனம் மோதியுள்ளது. 

இந்த விபத்தில், 9 மாத குழந்தை, 2 பெண்கள் மற்றும் வேன் ஓட்டுநர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிவேகம் மற்றும் ஓட்டுனரின் தூக்க கலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட காவல்துறையினரின் விசாரணையில் தகவல் தெரிவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Omni Van Accident 5 Died on Spot Police Investigation 31 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->