பிச்சையெடுத்து வாழ்ந்து வந்த மூதாட்டியின் கிட்னி திருட முயற்சி?.. தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி.. காவல்துறை விசாரணை.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மைய பகுதியில் இராமநாயக்கன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி நீரில் 70 வயது மூதாட்டி இறங்கி செல்வதை, அப்பகுதியில் துணிதுவைத்துக்கொண்டு இருந்த நபர்கள் கவனித்துள்ளனர். 

இதனையடுத்து இது தொடர்பாக ஓசூர் மாநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காவல் உதவி ஆய்வாளர் செல்வராகவன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல், காவல் அதிகாரி கதிரவன் ஆகியோர் விரைந்துள்ளனர். 

தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மூதாட்டி தொடர்ந்து ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று கொண்டு இருந்ததால் காவல் அதிகாரிகள் மூவரும் ஏரிக்குள் விரைந்து சென்று மூதாட்டியை மீட்டுள்ளனர். 

பின்னர், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் மேற்கொண்ட விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்தர்ப்பள்ளி பகுதியை சார்ந்த முனியம்மா (வயது 70) என்பது தெரியவந்துள்ளது. 

மேலும், இவர் பிச்சையெடுத்து பிழைத்து வந்த நிலையில், தனது கிட்னியை சிலர் திருட முயற்சி செய்வதாகவும், இதனால் தற்கொலை முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரத்தின் மைய பகுதியில் உள்ள இராமநாயக்கன் ஏரியில் உள்ள தண்ணீரில் 70 வயது மூதாட்டி இறங்கி நடந்து செல்வதை அப்பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்த நபர்கள் ஓசூர் மாநகர காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Old Lady Suicide Attempt in Lake Says Some Person Attempt to Stolen Kidney


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->