உடல்நல பிரச்சனையால் அவதி.. விபரீத முடிவெடுத்த நர்சிங் கல்லூரி மாணவி.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை நேரு நகர் பகுதியை சார்ந்தவர் தேவராஜன். இவரது மகள் பரமேஸ்வரி (வயது 18). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வந்துள்ளார். 

இவர் உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த நிலையில், பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று இது குறித்து சிகிச்சை பெற்றும் பலனில்லை. இதனால் மனமுடைந்த மாணவி யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இவரைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், மீட்டு அங்குள்ள ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாது உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், பரமேஸ்வரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Nursing girl Student Suicide Police Investigation 20 Dec 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->