ஒதுக்குபுறமான ஓடையில் பிரியாணியுடன் உல்லாசம்.. தோழனை போட்டுத்தள்ளி, பணத்துடன் எஸ் ஆன பெண்மணி.!
Krishnagiri man Palanisamy Murder by girl with affair enjoy
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்தவர் பழனிச்சாமி (வயது 30). இவர் கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள மாந்தூர் பகுதியில் உள்ள இனிப்பகத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 28 ஆம் தேதியன்று தியாகதுருவம் அடுத்துள்ள பிரிதிவிமங்கலம் ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இந்த விஷ்யம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
அப்பகுதிக்கு அருகேயுள்ள கண்காணிப்பு காமிராவை சோதனை செய்கையில், பழனிச்சாமி உணவகத்தில் இருந்து இரவு நேரத்தில் பிரியாணி வாங்கி சென்றது தெரியவந்துள்ளது. மேலும், அவருடன் பெண் ஒருவரும் சென்றுள்ளார். அந்த பெண் குறித்த விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை இலுப்பையூர் கிராமத்தை சார்ந்த கோமதி (வயது 37) என்பது தெரியவந்துள்ளது.
இவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், அவருக்கு பலருடன் தொடர்பு இருந்ததும், பழனிசாமியை அவர்தான் கொலை செய்துள்ளார் என்பதும் உறுதியானது. இது குறித்த விசாரணைக்கு பின்னர் கோமதி அளித்த வாக்குமூலத்தில், " எங்கள் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று கள்ளக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு இருவரும் தியாக துருவம் வந்தடைந்தோம்.
பழனிசாமி மதுபோதையில் இருந்த நிலையில், பிரியாணி வாங்கி வந்துள்ளார். இவர்கள் இருவரும் பிரிதிவிமங்கலம் பகுதியில் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு உல்லாசமாக இருந்துள்ளனர். உல்லாசத்திற்கு பின்னர் மதுபோதையில் இருந்த பழனிச்சாமி என்னை அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரிடம் இருந்த அலைபேசி மற்றும் ரூ.3,500 பணத்தை எடுத்திவிட்டு சென்றேன் " என்று தெரிவித்துள்ளார். மேலும், இவரின் மீது ஏற்கனவே இளைஞர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, பணத்தை திருடி செல்வது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Krishnagiri man Palanisamy Murder by girl with affair enjoy