காதல் தற்கொலைக்கு துணிய., தாய், மகனுடன் தற்கொலை.. கிருஷ்ணகிரியை அதிர்ச்சியுற வைத்த பரபரப்பு சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


விருப்பமில்லாத திருமணத்தை தடுக்காததால் காதல் ஜோடிகள் தற்கொலைக்கு முயற்சிக்க, மனமுடைந்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரர் தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் மிண்டிகிரி கிராமத்தை சார்ந்தவர் மகாலிங்கம் (வயது 50). இவர் டெம்போ ஓட்டுநராக ஓசூரில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அம்சவேணி (வயது 42). இவர்களுக்கு பிரியா என்ற 19 வயது மகளும், திரிஷா என்ற 17 வயது மகளும் என இரண்டு மகள்களும், விஷ்ணு என்ற 13 வயதுடைய ஒரு மகனும் என 3 குழந்தைகள் உள்ளனர். 

12 ஆம் வகுப்பு பயின்றுவிட்டு வீட்டில் இருக்கும் பிரியாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்த பெற்றோர், வரன் பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். பிரியாவுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி திருமணம் நடக்க தேதி குறிக்கப்பட்ட நிலையில், திருமண ஏற்பாடுகள் மற்றும் பிற வேலைகளும் இருவீட்டார் சார்பாக விறுவிறுப்புடன் கவனிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரியாவுக்கும், அப்பகுதியை சார்ந்த திருப்பதி என்ற 19 வயது நபருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. பிரியாவின் திருமண ஏற்பாடுகள் குறித்து காதலனிடம் தெரிவித்த பெண்மணி, இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என திட்டமிட்டுள்ளனர். இந்த விஷயம் நேற்று ப்ரியாவின் தாயாரான அம்சவேணிக்கு தெரியவந்துள்ளது. இதனை அறிந்த பிரியாவின் தாய் அம்சவேணி மகளை கண்டித்துள்ளார். 

இதனால் மனமுடைந்துபோன பிரியா தனது காதலன் திருப்பதிக்கு போனில் தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவிக்கவே, இருவரும் நேற்று இரவு அவரவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். திருப்பதியை மீட்ட பெற்றோர்கள் அங்குள்ள தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, பிரியாவும் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். 

இந்த தகவலை அறிந்த மணமகன் தரப்பு அம்சவேணியிடம் பல கேள்விகளை எழுப்பவே, மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிய அம்சவேணி தனது இளையமகள் திரிஷா மற்றும் மகன் விஷ்ணுவை நேற்றிரவு அங்குள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச்சென்று கிணற்றில் கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். பின்னர், அம்சவேணியும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட போது, பாறையில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கிணற்றில் விழுந்து நீச்சல் தெரியாமல் தத்தளித்த விஷ்ணுவை அம்சவேணி நீருக்குள் அமுக்கி உயிரிழக்க வைத்துள்ளார். பின்னர், திரிஷாவை நோக்கி வந்த அம்சவேணி, தலையில் பலத்த காயத்துடனும் மகளை கொலை செய்ய முயற்சித்துள்ளார். தாயும் - மகளும் நடத்திய போராட்டத்தில் அம்சவேணியின் தலையில் இரத்தம் அதிகளவு கசிந்து மயக்கமடைந்து நீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

கிணற்றுக்குள் இருந்த மோட்டார் பைப்பை எப்படியோ பற்றிக்கொண்ட திரிஷா விடியும் வரை பயத்துடன் உயிருக்கு போராடி பின்னர் சத்தம் போட்டு உதவி கேட்டுள்ளார். இதனைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் கிணற்றுக்கு சென்று பார்க்கையில் விபரீதம் புரிந்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த மத்தூர் காவல் துறையினர் மற்றும் போச்சம்பள்ளி தீயணைப்பு படையினர் திரிஷாவை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அவரது தகவலின் பேரில் அம்சவேணி மற்றும் விஷ்ணுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பதின்ம வயது காதல் இருவரை தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வைத்து, 2 பேரின் உயிரை காவு வாங்கியுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Love Issue Mother and Brother Suicide Love Couple suicide Attempt Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->