காதல் திருமண கள்ளக்காதல்.. மனைவியின் செயலால், தாலியோடு கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவன்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மல்லிபட்டினம் பகுதியை சார்ந்தவர் அமுல்ராஜ் (வயது 31). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரஞ்சிதா (வயது 28). இவர்கள் இருவரும் கடந்த 9 வருடத்திற்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். 

இவர்களுக்கு பவ்யா என்ற 7 வயது மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னதாக இவர்களின் மகன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த நிலையில், ரஞ்சிதாவுக்கு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் கிரானைட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தங்கராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கம் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம், ரஞ்சிதாவின் கணவர் அமுல்ராஜூக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அமுல்ராஜ் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனை கண்டுகொள்ளாத ரஞ்சிதா, தங்கராஜுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இதனால் கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்குள் முன்னதாக வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அமுல்ராஜ் மனைவியை பல இடங்களில் தேடிப்பார்த்து கிடைக்காத நிலையில், நேற்று முன்தினம் ரஞ்சிதா கள்ளக்காதலன் தங்கராஜின் வீட்டில் இருப்பதாக அமுல்ராஜ்க்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து, ரஞ்சிதாவுக்கு தொடர்பு கொண்ட அமுல்ராஜ் வீட்டிற்கு அழைத்த நிலையில், இருவரும் வீட்டின் பின்புறம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதன்போது இவர்களுக்குள் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த அமல்ராஜ் ரஞ்சிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

மேலும், ரஞ்சிதாவின் கழுத்தில் இருந்த தாலியை வைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்து தங்கராஜ் சென்றுள்ளார். இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த தங்கராஜ், மதுபானம் அருந்திவிட்டு உறங்கியுள்ளார். காலையில் ரஞ்சிதா வீட்டின் பின்புறம் பிணமாக கிடப்பதை கண்ட பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

போதையில் படுத்து உறங்கிய அமல்ராஜை எழுப்பி விசாரணை செய்கையில், மனைவியின் கள்ளகாதலால் அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அமல்ராஜை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Illegal Affair Wife Ranjitha Murder By Husband Amul Raj They Love Married Couples


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->