குழந்தையில்லாத ஏக்கம்.. மனைவியின் மீது சந்தேக பார்வை.. குடிகாரனால் குடிமூழ்கிப்போன சோகம்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை கல்லாவியை அடுத்துள்ள பள்ளசூலக்கரை பகுதியை சார்ந்தவர் தங்கராஜ் (வயது 36). இவர் தையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ருக்மணி (வயது 30). இவர்கள் இருவருக்கும் கடந்த 12 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த தம்பதிக்கு தற்போது வரை குழந்தை இல்லாத நிலையில், ருக்மணி போச்சம்பள்ளி சிப்காட்டில் செயல்பட்டு வரும் தனியார் காலனி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், மனைவியின் நடத்தை மீது தங்கராஜுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 

இதனால் அவ்வப்போது மது அருந்திவிட்டு, வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதனைப்போல நேற்று முன்தினத்தன்றும் மதுபோதையில் வந்த தங்கராஜ் மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். இவர்களை அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து தூங்க அனுப்பியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், அதிகாலை 4 மணிவரை தூங்காமல் இருந்த கொடூரன் தங்கராஜ், மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். இதனால் ருக்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த கொலை குறித்து அக்கம் பக்கத்தினர் கல்லாவி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ருக்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவே, காவல் துறையினர் வருவதற்கு முன்னதாக புறப்பட்ட தங்கராஜ், கல்லாவி காவல் நிலையத்தில் சென்று விஷயத்தை கூறி சரணடைந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri husband Thangaraj killed wife Rukmani due to Doubt about affairs


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->