கிருஷ்ணகிரி அருகே கோர விபத்து.. 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி.!
Krishnagiri Hosur Tractor Accident 5 Woman Died Spot Police Investigation 21 December 2020
கர்நாடக மாநிலத்தில் உள்ள கணகப்புரா கிராமத்தை சார்ந்த 25 பேர், கிருஷ்ணகிரி மாவட்டம் மஞ்சக்கொண்டபள்ளி அஞ்செட்டி அருகேயுள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு டிராக்டரில் வந்துள்ளனர். இந்நிலையில், மலைப்பாங்கான பகுதியில் வருகையில் டிராக்டர் விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்தில், டிராக்டரில் பயணம் செய்த 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், வளைவுப்பகுதியில் திரும்புகையில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் மற்றும் அஞ்செட்டி காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Krishnagiri Hosur Tractor Accident 5 Woman Died Spot Police Investigation 21 December 2020