பட்டப்பகலில் துணிகரம்... துப்பாக்கி முனையில் 7 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை...! - Seithipunal
Seithipunal


ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில், துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் - பாகலூர் சாலையில், முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இன்று காலை ஊழியர்கள் வழக்கம்போல தங்களின் பணியை தொடங்கிய நிலையில், திடீரென உள்ளே நுழைந்த மர்ம கும்பல் துப்பாக்கியைக் காட்டி ஊழியர்களை மிரட்டியுள்ளது. 

அங்கு பணியில் இருந்த அனைத்து ஊழியர்களையும் மிரட்டி, கைகளை கட்டிப்போட்ட கும்பல் மொத்தமாக சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.96 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளது. 

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெங்களுரில் தங்கியிருக்கும் வடமாநிலத்தை சார்ந்த கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், தனிப்படை காவல் துறையினர் பெங்களூர் விரைந்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Hosur Muthoot Finance Company Robbery Gun Point Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->