#Breaking: பூமிபூஜை பந்தல் அமைக்கும் பணியில் சோகம்.. மின்சாரம் தாக்கி 4 கட்டுமான தொழிலாளர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் - கர்நாடக மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு பூமி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முக்கியஸ்தர்கள் வந்து செல்வார்கள் என்று கட்டுமான குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

இதனையடுத்து, பூமி பூஜைக்கு பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியின் போது பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வந்த இடத்தில் எல்லைச்சுவருக்கு அருகே மின்சார கம்பிகள் சென்றுள்ளது. 

இந்த மின்சார கம்பிகள் பந்தல் அமைக்கும் கம்பிகளுடன் எதிர்பாராத விதமாக உரசிக்கொள்ளவே, பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த ஆகாஷ் (வயது 30), மகாதேவ் (வயது 35), விஜயந்தா (வயது 35), விஜய் (வயது 40) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், உடன் அருகில் இருந்த 6 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து இது குறித்து உடனடியாக அவசர ஊர்தி மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரமும் உடனடியாக அப்பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக அத்திப்பள்ளி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Hosur Karnataka Attibele Border Site Construction Electrical Attack 4 Workers Death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->