ஓசூர்: பப்ஜி விளையாட தீவிரம்.. தாய் கண்டித்ததால் அரங்கேறிய சோகம்..! - Seithipunal
Seithipunal


ஓசூரில் தாய் பப்ஜி விளையாடுவதை கண்டித்ததால், மனமுடைந்த 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர், வாய் பேச முடியாத ஜெயலட்சுமி. இவரது கணவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தனது இரண்டு மகன்களுடன் ஜெயலட்சுமி வசித்து வந்துள்ளார். 

இவரது இரண்டாவது மகன் ரவி அரசு தொழிற்நுட்ப கல்லூரியில் முதலாம் வருடம் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த நிலையில், பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து எந்த நேரமும் அலைபேசியில் பப்ஜி விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தான். இது தொடர்பாக பலமுறை கண்டித்தும் கேட்காத நிலையில், சம்பவத்தன்று சிறுவனின் சித்தப்பாவும், தாயாரும் கண்டித்துள்ளனர். 

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். குடும்பத்தினர் ரவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ரவி இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Hosur 16 Year Old Student Died Because condemned Mother about PUBG Game


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->