ஆபாச படத்தை காண்பித்து அத்துமீறிய காமுகன்... கிருஷ்ணகிரியில் வேலை கொடுப்பதாக அரங்கேறிய பயங்கரம்.!!
Krishnagiri girl sexual torture police arrest culprit
வேலை தருவதாக கூறி பெண்ணிடம் ஆபாச படம் காண்பித்து தவறாக நடக்க முயன்ற கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை சார்ந்தவர் நாதா முரளி.
இவன் இணையதள சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறான். இந்த மையத்தில் பணி இருப்பதாக விளம்பரப்படுத்திய நிலையில், இவனது நிறுவனத்திற்கு 25 வயது மதிக்கத்தக்க பெண்மணி நேர்முக தேர்விற்கு வந்துள்ளார்.
இந்த பெண்ணிடம் காமுகன் முரளி ஆபாச படத்தை காண்பித்து தவறாக நடக்க முயற்சி செய்துள்ளான். இவனிடம் இருந்து தப்பிய பெண்மணி, இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து காமுகன் முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Krishnagiri girl sexual torture police arrest culprit