பெண்ணை கொலை செய்து கால்வாயில் வீசிய கொடூரன்.. பகீர் வாக்குமூலம்.. அனாதையான பச்சிளம் குழந்தைகள்..!!
Krishnagiri girl murder due to illegal affair
தமிழகத்தின் கிரிஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம் போத்தபுரம் பகுதியை சார்ந்தவர் மலர் (வயது 38). இவரது கணவர் கடந்த 7 வருடத்திற்கு முன்னதாக உயிரிழந்தயுள்ள நிலையில், மலருக்கு 15 வயதுடைய மகளும், 12 வயதுடைய மகனும் இருக்கின்றனர். இவர்கள் தட்டுவடை தயார் செய்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்நலயில், கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக மலர் வீட்டினை விட்டு வெளியே சென்ற நிலையில், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் மலரின் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர்.
இவரை எங்கு தேடியும் காணாததால் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், மலரின் சடலம் அங்குள்ள கால்வாயில் மீட்கப்பட்டுள்ளது.
இவரது சடலத்திற்கு அருகேயே மலரின் உறவினர் காந்தி (வயது 28) என்பவரின் இரு சக்கர வாகனமும் மீட்கப்பட்டதை தொடர்ந்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இது குறித்த விசாரணையில் காந்திக்கும் - மலருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.
காந்தியை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், காந்தியும் - மலரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில மாதமாக மலர் வேறொரு நபருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதனை காந்தி கண்டித்தும் மலர் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காந்தி, மலரை திட்டமிட்டு வரவழைத்து மதுபாட்டிலால் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மலரின் குழந்தைகள் அனாதையாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
Krishnagiri girl murder due to illegal affair