கத்தி கதறிய பெண்..! எக்ஸ்ரே செய்த மருத்துவர்கள் கண்ட காட்சியால் அதிர்ச்சி.!
Krishnagiri girl murder attempt
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியை சார்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி மல்லிகா (வயது 40). மல்லிகா கடந்த மே 25 ஆம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக கத்தியால் குத்தபட்டுள்ளார்.. மல்லிகாவின் நெஞ்சு பகுதியில் 7 அங்குல நீளம் கொண்ட கத்தி பாய்ந்துள்ளது.
பின்னர் கத்தியால் குத்திய உறவினர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். மல்லிகாவை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். முதற்கட்ட சிகிச்சைகள் முடிந்து, மே 26 அன்று கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கோவை மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து பார்க்கையில், நெஞ்சில் 6 அங்குல கத்தி நெஞ்சு பகுதியில் இருப்பது தெரியவந்தது. நல்ல வேலையாக நுரையீரல் போன்ற பிற உறுப்புகளை கத்தி பாதிக்காமல் இருந்ததை தொடர்ந்து, கத்தி அறுவை சிகிச்சை மூலமாக வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு 30 மணிநேரம் தொடர் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதில் உடலில் இருந்த கத்தியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். தற்போது முழு நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளார்.
English Summary
Krishnagiri girl murder attempt