#JustIN: நீதிமன்ற வளாகத்திலேயே காவல் அதிகாரி தற்கொலை.. கிருஷ்ணகிரியில் சோகம்..! - Seithipunal
Seithipunal


ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காவலர் அன்பரசன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட காவலரின் உடலை கைப்பற்றி காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதியின் காவலராக பணியாற்றி வந்தவர் அன்பரசன். இவர் கடந்த இரண்டு நாட்களாக மாயமான நிலையில், இவரை உறவினர்கள் தேடி வந்தனர். 

மேலும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், காவல் அதிகாரி நீதிமன்ற வளாகத்திலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைசெய்து கொண்ட நிலையில் இருந்ததாகவும், அவரின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூறுகையில், காவல் அதிகாரி அன்பரசன் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டு இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். அவரது மன அழுத்தத்திற்கான காரணம் தொடர்பாக காவல் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri District Court Police Officer Anbarasan Suicide Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->