சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி சீரழித்த சித்தப்பா.. பெற்றோர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு.!
Krishnagiri Denkanikottai 17 Aged Child Sexual Abuse by Chitappa
சித்தப்பா முறைகொண்ட கொடூரன் சிறுமியை காதல் வலையில் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், சிறுமியின் பெற்றோர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரம் அரங்கேறியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி அருகேயுள்ள பெடரஅள்ளி பகுதியில், 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இதே பகுதியை சார்ந்தவர் கேசவன் (வயது 21). கேசவன் சிறுமியின் குடும்பத்தினருக்கு உறவினர் என்பதால், அடிக்கடி சிறுமியின் இல்லத்திற்கு வந்து சென்றுள்ளான். இதன்போது, சிறுமியுடன் பேசி நெருங்கிய பழக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவருகிறது.
சில மாதங்கள் கழித்து சிறுமியிடம் தனது காதலை வெளிப்படுத்திய கேசவன், அதனை ஏற்றுக்கொள்ளவும் வைத்துள்ளான். சிறுமியும் - கேசவனும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ள நிலையில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய கேசவன் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அவ்வப்போது, தனிமையில் சிறுமியை அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்த துயரமும் நடந்துள்ள நிலையில், கடந்த மே மாதம் சிறுமியின் பெற்றோருக்கு இருவரும் தனிமையில் செல்லும் விஷயம் தெரியவந்துள்ளது. சிறுமியிடம் பெற்றோர்கள் இது தொடர்பாக விசாரித்துள்ளனர்.
சில நாட்கள் சிறுமி எதையும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், பின்னர் பெற்றோரிடம் தானாக முன்வந்து விஷயத்தை தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அங்குள்ள தேன்கனிக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சம்பூரணம், விசாரணை மேற்கொண்டு கேசவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
மேலும், விசாரணையில் சிறுமியிடம் காதல் மொழி பேசிய கேசவன் சித்தப்பா முறை என்பதும் உறுதியானதால், அவன் திட்டமிட்டே சிறுமியை சீரழித்ததும் அம்பலமானது. இந்த விஷயத்தில் இரு குடும்பத்திடையே தகராறு ஏற்பட்ட நிலையில், சிறுமியின் பெற்றோர் மீது கேசவனின் உறவினர்கள் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த புகாரின் பேரில் கேசவனின் உறவினர்களான சூர்யா என்ற அழகேசன், பச்சமுத்து (வயது 25), ஆனந்தன் (வயது 28), பச்சையப்பன் (வயது 32), கிருஷ்ணன் (வயது 30) ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Krishnagiri Denkanikottai 17 Aged Child Sexual Abuse by Chitappa