வயிற்று வலியால் துடித்துவந்த சிறுமி எடுத்த விபரீத முடிவு.. ஆறுதலாக இருந்த பெற்றோரை தவிக்கவிட்டு சென்ற சோகம்..!!
Krishnagiri child girl suicide and died
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகேயுள்ள ஜெகினக்கொல்லை கிராமத்தை சார்ந்தவர் முருகன். இவரது மகளின் பெயர் சுஜாதா (வயது 17). இவர் பர்கூர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், மாணவிக்கு வயிற்று வலி அதிகளவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கடுமையாக அவதியுற்று வந்துள்ளார். இதற்காக பல்வேறு பகுதிகளில் சிகிச்சை பெற்றும் இவருக்கு வயிற்று வலி பிரச்சனை சரியாகவில்லை.
இதனால் கடும் மனஉளைச்சலுடன் சிறுமி இருந்து வந்த நிலையில், இப்பகுதியில் இருந்து மாந்தோப்பில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Krishnagiri child girl suicide and died