பேஸ்ட் என்று நினைத்து எலிபேஸ்டை வைத்து பல் துலக்கிய சிறுமி பரிதாப பலி... பெற்றோர்களே உஷாராக இருங்கள்..!
Krishnagiri child death police investigation
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை அருகேயுள்ள கானம்பட்டி பகுதியை சார்ந்தவர் தீபிகா (வயது 10). இந்த சிறுமி பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், சிறுமி இன்று காலை எழுந்தவுடன் பல்துலக்க முயற்சித்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமி அங்கு வைக்கப்பட்டு இருந்த எலிமருந்தை பல் துலக்கும் பேஸ்ட்டை என்று நினைத்து, அதனை வைத்து பல் துலக்கியுள்ளார். இதனையயடுத்து சிறிது நேரத்திலேயே சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியை மீட்ட பெற்றோருக்கு, அங்குள்ள ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Krishnagiri child death police investigation