தொழிலதிபரின் வீட்டிற்கு வந்து, நெஞ்சில் சுட்டு கொலை.. ஓசூரில் ரவுடி வெறிச்செயல்.. அரங்கேறிய பயங்கரம்.!!
Krishnagiri Business Man Murder by Rowdy 24 May 2021
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை தளி பெல்லூர் கிராமத்தை சார்ந்தவர் லோகேஷ் (வயது 30). இவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு லோகேஷ் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த நிலையில், நள்ளிரவில் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் லோகேஷை எழுப்பி நிலம் சம்பந்தமாக பேச வேண்டும் என்று கூறியுள்ளனர். உறக்க கலக்கத்தில் இருந்த லோகேஷ் வீட்டின் கதவை திறந்து வெளியே வரவே, மர்ம கும்பல் லோகேஷை தாக்கியுள்ளனர்.
மேலும், அவர்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து லோகேஷை சுட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயந்தி வெளியே வந்து பார்க்கையில், கணவர் நெஞ்சில் குண்டடிபட்டு இரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுளளார்.
மேலும், அக்கம் பக்கத்தினரும் துப்பாக்கி சத்தம் கேட்டு விரைந்த நிலையில், காரில் மர்ம கும்பல் செல்வதை கண்டுள்ளனர். இதனையடுத்து, லோகேஷை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில், மருத்துவமனையில் லோகேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை காவல் டி.எஸ்.பி சங்கீதா மற்றும் தளி காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர் லோகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர்.
இந்த விசாரணையில், நிலம் தொடர்பாக லோகேஷுக்கும் - குருபரப்பள்ளி பகுதியை சார்ந்த ரெட்டி என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்த நிலையில், லோகேஷ் ரூ.5 இலட்சம் பணம் கொடுக்க ஏந்தியிருந்துள்ளது. லோகேஷிடம் ரெட்டி பலமுறை கேட்ட நிலையில், அவர் பணத்தை சிறிது காலத்தில் தந்து விடுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ரெட்டி தரப்பு பணத்தை உடனே வழங்க கூறி பிரச்சனை செய்த நிலையில், பிரச்சனையின் முடிவில் லோகேஷின் வீட்டிற்கு வந்து கொலையை அரங்கேற்றி சென்றது அம்பலமானது. இதனையடுத்து, ரெட்டி மற்றும் அவனது கூட்டாளிகள் 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Krishnagiri Business Man Murder by Rowdy 24 May 2021