கிருஷ்ணகிரியில் 74 வயது முதியவருக்கு கரோனா உறுதி.. தீவிர பணியில் சுகாதாரத்துறையினர்.!!
krishnagiri 74 year old man positive corona virus symptoms
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் பச்சை மண்டலத்தில் இருந்தது. தமிழகத்திலேயே பாதிப்பு ஏற்படாத மாவட்டமாக கிரிஷ்ணகிரி மாவட்டம் இருந்தது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி பகுதியை சார்ந்த 74 வயது முதியவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.... இவர் ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தி சாயிபாபா கோவிலுக்கு சென்று வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தியுள்ள காவல் துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர், இவர் சென்று வந்த பிற இடங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதியவரை மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.
முதியவரின் குடும்பத்தினர் 3 பேர் உட்பட அவரது உறவினர்கள் 8 பேரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர். முதியவரின் சொந்த கிராமமான நல்லூர் கிராமம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிக்கு செல்லவும், வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
krishnagiri 74 year old man positive corona virus symptoms