கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை ஊழியரின் அட்டூழியம்! பரிதவிக்கும் நோயாளி! கண்கலங்க வைக்கும் வீடியோ!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில் நோயாளி ஒருவரை மருத்துவ பணியாளர் வீல் சேரில் இருந்து கீழே தள்ளி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவர் சக்கர நாற்காலியில் அமர  முற்படுகையில், அவர் அதற்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், காலதாமதம் ஆனதை உணர்ந்த மருத்துவப் பணியாளர் அவர் மீது கோபம் கொண்டு, அவரை பிடித்து இழுத்து கீழே தள்ளி விட்டார்.  

இந்த நோயாளி சிறுநீரக பாதிப்புக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. அவர் வீல் சேரில் அமர முடியவில்லை என கூறியதை அடுத்து மருத்துவ பணியாளர் கீழே தள்ளி விட்டுள்ளார். 

இந்த விவகாரம் தற்போது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதங்களில் பகிரபட்டு வருகிறது. மேலும் இது குறித்து விசாரணை செய்து சம்மந்தப்பட்ட மருத்துவ பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

krishangiri gh employee torture the patient while sitting wheel chair


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->