பாஜகவை சீண்டி சிக்கலில் சிக்கி தவிக்கும் சுற்றுசூழல் ஆர்வலர்..! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டு. இவர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், சுற்றுச் சூழல் ஆர்வலர், சமூக செயற்பாட்டாளரும் கூட, இவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நேற்று மாலை தூத்துக்குடியில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  கிருஷ்ணமூர்த்தி பேசியிருந்தார், அப்போது அவர் RSS, BJP, VHP போன்ற அமைப்புகளை விமர்சித்து பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. 

Image result for arrest seithipunal

இதை தொடர்ந்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சாதி, மத, இனப் பிரிவினைகளைத் தூண்டி விடுதல் போன்ற பிரிவுகளில் கிருஷ்ணமூர்த்தி என்கின்ற கிட்டு மீது தென்பாகம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும், இந்த வழக்கு விரைவில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் அல்லது நீதிபதியின் இல்லத்தில் கிருஷ்ணமூர்த்தி ஆஜர் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தென்பாகம் காவல்துறை தெரிவித்திருக்கிறது.    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

krishanamoorthy arrested for against to caa


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->