கோவில்பட்டியை சேர்ந்த இந்திய இராணுவ வீரர், எல்லையில் உயிர் இழப்பு.!
Kovilpatty army man death
காஷ்மீரின் இந்திய எல்லை பகுதியான லடாக் பகுதியில், நடந்த விபத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் நேற்று உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரின் மகன் கருப்பசாமி (வயது 34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய இராணுவத்தில் பணியாற்றி வந்தார்.
இந்திய இராணுவத்தில் 'நாயக்' பதவி வகித்து வந்த கருப்பசாமி, காஷ்மீரின் லடாக் பகுதியில் பணியில் இருந்த போது நடந்த விபத்தில் மரணமடைந்துள்ளார். இவரின் மரண செய்தியை ராணுவத்தில் இருந்து கருப்பசாமியின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்காக பணியில் உயிரிழந்த கருப்பசாமிக்கு தமயந்தி என்ற மனைவியும், கன்யா(வயது 7), வைஷ்ணவி(வயது 5) ஆகிய மகள்களும், பிரதீப்ராஜ் (வயது 1) என்ற மகனும் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் தான், 2 மாத விடுமுறை முடித்து கொண்டு மீண்டும் பணிக்கு திரும்பினார் கருப்புசாமி.
English Summary
Kovilpatty army man death