17 பேர் பலியான சம்பவத்தில் வீட்டு உரிமையாளர் மீது புதிய வழக்கு பதிவு.! என்ன வழக்கு தெரியுமா?
kovai wall accident new case filed to house owner
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சுற்றுச்சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை சிறுமுகை பகுதியில் வைத்து தனிப்படை போலீசாரால் நேற்று கைது செய்யப்ட்டார்.
கைதுசெய்யப்பட்ட சிவசுப்ரமணியம் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், அலட்சியமாக விபத்து ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் நேற்றே இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு. இதையடுத்து கோவை நீதிமன்றக் காவலில் ஆஜர்படுத்திய பின்னர் 15 நாள் மத்திய சிறையில் சிவசுப்ரமணியம் நேற்று அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சிவசுப்ரமணியம் மீது அலட்சியமாக விபத்து ஏற்படுத்துதல் என நேற்று பதிவு செய்யப்பட்ட பிரிவை மாற்றி, தெரிந்தே விபத்தை ஏற்படுத்துதல் என்ற புதிய பிரிவில் மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்தனர்.
English Summary
kovai wall accident new case filed to house owner