கோவை துடியலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில்., தரமான தீர்ப்பளித்த நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் உள்ள பன்னிமடை அருகேயுள்ள துடியலூர் பகுதியை சார்ந்தவர் சதீஷ். இவரது மனைவியின் பெயர் வனிதா. இவர்கள் இருவருக்கும் ஏழு வயதுடைய பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை அதே பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். தினமும் பள்ளிக்கு சென்று விட்டு பின்னர் மாலையில் வீடு திரும்புவது வழக்கம். 

அந்த வகையில், பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பாததை அடுத்து சிறுமியை தேடி அழைந்துள்ளனர். பல இடங்களில் தேடியும் சிறுமி காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்., காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களது புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு கொண்டு இருந்த நேரத்தில், அங்குள்ள கஸ்தூரிநாயக்கன் புத்தூர் பகுதியில் உள்ள இடத்தில் சிறுமியின் பிரேதம் உள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இந்த வழக்கு தொடர்பாக சுமார் 60 க்கும் மேற்பட்ட நபர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., குற்றவாளியான சந்தோஷ் குமாரை அதிரடியாக காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையை அடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

கடந்த ஏப்ரல் மாதம் 25 ம் தேதியதன்று வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை அழைத்து, வீட்டிற்கு கூட்டி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட வலியால் சிறுமி அலறவே., அவரின் கழுத்தை நெரித்த சமயத்தில்., சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அவரின் உடலை எப்படி வெளியே கொண்டு செல்வது என்று தெரியாமல் இருந்துள்ளார். 

பின்னர் சிறுமியின் பெற்றோர் சிறுமியை தேடுவதை அறிந்து அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட கூடாதென்று அவர்களுடனே சிறுமியை தேடி அலைந்துள்ளார். சிறுமியின் உடலை தனது டீ-ஷர்ட்க்குள் மறைத்து வைத்து எடுத்து சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. 

குற்றவாளியான சந்தோஷ்குமார் சிறையில் இருந்த நிலையில்., இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி ராதிகா இந்த வழக்கை விசாரித்து வந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பான தடயவியல் அறிக்கை நேற்று வந்தது. அதில் சிறுமியை சந்தோஷ்குமாரும் மற்றொருவரும் பாலியல் வன்புணர்வு செய்தது உறுதியானது.

இந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் நீதிபதி ராதிகா சந்தோஷ் குமாரை குற்றவாளியாக அறிவித்தார். மேலும் அவரது தண்டனை விவரங்களை பிற்பகல் மூன்று மணிக்கு அறிவிக்கப்பட்டது. தற்போது, குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு ஆயுள்தண்டனை மற்றும் தூக்குத்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai thudiyalur child abused person punish


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->