கோவைக்கு ரெட் அலர்ட்.. பயங்கரவாதியின் புகைப்படம் வெளியீடு!!
kovai terrorist photo release
தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரித்துள்ளனர்.
இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தமிழகத்திலும் ஊடுருவியிருப்பதாக தமிழக டிஜிபிக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை தகவலால் தமிழாக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இவர்கள் இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டுள்ளனர். கோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கோவை முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசாருக்கு எச்சரிக்கையில் உள்ளனர். 6 பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் 5 பயங்கரவாதிகள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோவையில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதி என கருதப்படும் நபரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. புகைப்படத்தில் உள்ள நபரை பற்றி தெரிந்திருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது கோவைக்கு ரெட் அலர்ட் எனப்படும் அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி அளித்தார். தீவிரவாத அச்சுறுத்தல் வந்துள்ளதால் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.
English Summary
kovai terrorist photo release